தமிழ்நாடு செய்திகள்

இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

Published On 2025-04-04 16:13 IST   |   Update On 2025-04-04 16:13:00 IST
  • மக்களவை தேர்தலின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக வழக்கு.
  • ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீட்டித்துள்ளது.

மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு போடப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News