தமிழ்நாடு செய்திகள்
போரூர் - பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு தடுப்புக் கதவுகள்
- புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தட சேவை விரைவில் தொடங்கவுள்ளது.
- பயணிகள் தண்டவாளத்தில் தவறி விழுவதை தடுக்க நடவடிக்கையை எடுத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் கட்டம்-2 வழித்தடம் 4-ல் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், போரூர்-பூந்தமல்லி வழித்தட மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு தடுப்புக் கதவுகள் அமைக்கப்பட்டுள்ளது.
பயணிகள் தண்டவாளத்தில் தவறி விழுவதை தடுக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.