தமிழ்நாடு செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல்

Published On 2024-11-30 19:36 IST   |   Update On 2024-11-30 19:37:00 IST
  • ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.
  • அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.

இதன் எதிரொலியால், ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை தொட்டது.

மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும், அடுத்த 3- 4 மணி நேரத்தில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News