தமிழ்நாடு செய்திகள்

டிட்வா புயல் எதிரொலி- பொதுமக்களுக்கு SMS மூலம் எச்சரிக்கை

Published On 2025-11-29 19:55 IST   |   Update On 2025-11-29 19:55:00 IST
  • பொது மக்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை.
  • பொதுமக்கள் பலவீனமான கட்டிடங்கள் மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம்.

டிட்வா புயல் குறித்து பொது மக்களுக்கு தமிழ்நாடு மாநில பேரிடர் ஆணையம் குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.

அந்த குறுஞ்செய்தியில்,"டிட்வா புயல் காரணமாக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும்.

பொதுமக்கள் பலவீனமான கட்டிடங்கள் மரங்களுக்கு கீழே நிற்க வேண்டாம். டிட்வா புயல் காரணமாக கனமழை ஏற்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தினால் ஒத்துழைக்கவும்.

மின் கம்பிகள், ஈரமான மின் சாதனங்களைத் தொடாதீர்கள்." என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News