தமிழ்நாடு செய்திகள்
null

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடி நடவடிக்கை -நீதிமன்றம் உத்தரவு

Published On 2025-06-09 21:07 IST   |   Update On 2025-06-09 21:29:00 IST
  • தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • திரையரங்க உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய திரைப்படங்களுக்கு முதல் நான்கு நாட்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் மீதான இன்றைய விசாரணையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும்,ஓடிடி தளங்களில் சினிமா பார்க்கும் பழக்கம் அதிகரித்திருப்பதால் திரையரங்குகள் வெகு காலம் நீடிக்காது என்பதை திரையரங்க உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News