தமிழ்நாடு செய்திகள்
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது
- இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறுகிறது.
- நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
2025 - 26ம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறுகிறது.
நாளை சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்) கலந்தாய்வு மாதவரம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறுகிறது.
நாளை மறுதினம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.