தமிழ்நாடு செய்திகள்

கண்டக்டருக்கு விசிலுக்கு பதிலா வேற கொடுப்பாங்க - தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கிண்டல்

Published On 2026-02-10 07:01 IST   |   Update On 2026-02-10 07:01:00 IST
  • சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
  • இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐசிசி நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின், நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விசில் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தத் தடையானது ஐசிசி அல்லது பிசிசிஐ விதித்தது அல்ல என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை காவல்துறையினரால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் விளக்கமளித்தது.

இதனிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னம் விசில் என்பதால், விசில் கொண்டுசெல்ல அரசால் திட்டமிடப்பட்டு தடை விதிக்கப்பட்டதாக பெரும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

இந்நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெறும் டி20 உலக கோப்பைத் தொடரின் மற்ற போட்டிகளுக்கும் விசில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படும் பொருட்களின் பட்டியலில் தற்போது விசில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, "இன்றைக்கு சேப்பாக்கத்தில விசிலுக்கு தடை பண்ணுவாங்க. நாளைக்கு கண்டக்டருக்கு விசிலுக்கு பதிலா வேற கொடுப்பாங்க... அப்பறமா போலீஸ்கிட்ட இருந்து விசில் எல்லாம் பிடுங்கிவாங்க... ஆனா எங்க பசங்க விசில் இல்லாம கையாலே விசில் அடிப்பாங்க" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News