தமிழ்நாடு செய்திகள்

கூட்டணியில் இருந்துகொண்டு உயிரை வாங்குகிறார்கள் - காங்கிரசை விமர்சித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

Published On 2026-02-10 07:20 IST   |   Update On 2026-02-10 07:20:00 IST
  • 1967 வரை கங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, பிறகு வர முடிந்ததா?
  • எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது.

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அண்மைய காலமாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இதனிடையே சில நாட்களுக்கு முன்பு பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ""தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சுமூகமாகத்தான் இருக்கிறோம். எந்தவிதமான இழுபறியும் இல்லை. காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும், ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பம். நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கும் அளவிற்கு தி.மு.க. தலைவருக்கு பெரிய மனது உள்ளது. அதேபோல் ஆட்சியில் பங்கு தரும் மனசும் அவருக்கு இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இந்நிலையில், எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் திட்டவட்டமாக பேசியுள்ளார்.

புதுக்கோட்டையில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு உயிரை வாங்குகிறார்கள். 100 இடங்களில் வென்று கலைஞர் முதல்வராக இருந்தாரே, ஆட்சியில் பங்கு கொடுத்தாரா? 150 இடங்களில் திமுக ஜெயிக்கும் போது எப்படி கொடுக்கும்?

நீங்கள் வேண்டுமென்பதை கேளுங்கள்; செய்து தருகிறோம்; எந்த காலத்திலும் கூட்டணி ஆட்சி கிடையாது 1967 வரை கங்கிரஸ் ஆட்சியில் இருந்தது, பிறகு வர முடிந்ததா? திமுகவை வெல்ல ஒருவர் பிறந்து வர வேண்டும்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News