கோவை மாணவி சம்பவத்தில் கைதான 3 பேர் மீதும் கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன - மாநகர காவல் ஆணையர்
- போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.
- பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.
கோவை ஏர்போர்ட் அருகே மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டோம்.
* சந்தேகத்திற்கு இடமானவர்கள் வெள்ள கிணறு பகுதியில் பதுங்கி இருந்தனர்.
* போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றபோது துப்பாக்கியால் சுட்டு பிடித்தோம்.
* கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
* கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் சிவகங்கையை சேர்ந்தவர்கள், 15 ஆண்டுகளாக கோவையில் உள்ளனர்.
* சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர் மீதும் பல்வேறு கொலை, திருட்டு வழக்குகள் உள்ளன.
* சம்பவ இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்த 3 பேரும் கல்லை கொண்டு கார் கண்ணாடியை தாக்கி இளம்பெண்ணை தூக்கி சென்றனர்.
* கைகளில் வைத்திருந்த அரிவாளை கொண்டு ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை தூக்கிச்சென்றனர்.
* பிடிபட்ட மூவரில் 2 பேர் இருவரும் பிணையில் வெளியில் வந்துள்ள குற்றவாளிகள்.
* கைது செய்யப்பட்ட சதீஸ், கார்த்தி ஆகியோர் சகோதரர்கள். குணா என்பவர் அவர்களது உறவினர்.
* சாவியுடன் சாலையில் நின்றிருந்த இருசக்கர வாகனத்தை திருடிய நிலையில் அதன் மூலம் 3 பேரும் சிக்கி உள்ளனர்.
* பிருந்தாவன் நகர் மெயின் சாலை வரை போலீசார் ரோந்து பணி சென்றுள்ளனர். அதன்பின்னர் தான் சம்பவம் நடந்துள்ளது.
* இரவு 10.30 மணி முதல் 11 மணிக்குள்ளாக பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.
* கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்த இடத்திற்கு 15 நிமிடத்திலேயே சென்றாலும் போலீசாரால் உடனடியாக கண்டறிய இயலவில்லை.
* பெரிய சுவற்றுக்கு மறுபுறம் சம்பவம் நடைபெற்றதால் போலீசாரால் உடனடியாக கண்டறிய முடியவில்லை.
* பிடிபட்டுள்ள 3 பேரும் கூலிப்படையுடன் தொடர்புடைய நபர்களாகத் தெரியவில்லை. விசாரணைக்குப்பின் தெரியவர வாய்ப்பு உள்ளது.
* 3 பேர் மீதும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.