தமிழ்நாடு செய்திகள்

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு

Published On 2025-04-24 12:04 IST   |   Update On 2025-04-24 12:04:00 IST
  • தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கலைஞர்.
  • கும்பகோணத்தில் தமிழக அரசு சார்பில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்.

கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

* கவன ஈர்ப்பு தீர்மானம் மீது பேசிய ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என வலியுறுத்தினர்.

* மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கலைஞர்.

* தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு முக்கிய காரணம் கலைஞர்.

* பல்கலைக்கழகங்களுக்கு எல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

* கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் விரைவில் புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்படும்.

* கும்பகோணத்தில் தமிழக அரசு சார்பில் புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு கலைஞர் பெயர் சூட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News