சென்னையில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
- தீபாவளி நாளான 20-ந்தேதி 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
- 21-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனிடையே, வருகிற 23-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
குறிப்பாக, தீபாவளி நாளான 20-ந்தேதி 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், 21-ந்தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்ப்டடுள்ளது.
தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பூர், விருதுநகரில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.