தமிழ்நாடு செய்திகள்

விஜய் கூட்டத்தில் செயின் பறிப்பு: வாலிபருக்கு அடி உதை- நாகையில் பரபரப்பு

Published On 2025-09-20 14:10 IST   |   Update On 2025-09-20 14:10:00 IST
  • வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் செயினை பறித்ததாக குற்றச்சாட்டு.
  • த.வெ.க. தொண்டர்கள் அடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் இன்று நாகைப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். விஜய் பேச்சை கேட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, த.வெ.க. தொண்டர்கள் திடீரென வடமாநில வாலிபர் ஒருவரை அடித்து உதைத்தனர். இதில் அந்த வாலிபர் மயங்கி விழுந்தார்.

பெண் ஒருவர் மகளுடன் கூட்டத்திற்கு சென்றபோது, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த பெண்ணின் நகை கூர்ந்து கவனித்ததாகவும், இதனால் அந்த பெண் தன் மகளிடம் நகையை கழற்றி கொடுத்து பையில் வைக்கச் சொன்னதாகவும் தெரிகிறது.

பையில் இருந்த நகையை வடமாநிலத்தவர் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் த.வெ.க. தொண்டர்கள் அந்த வாலிபரை அடித்து உதைத்துள்ளனர். ஆனால், அந்த நபரிடம் நகை இல்லை. நகையை பறிகொடுத்த அந்த பெண், அந்த வாலிபர் மற்றொரு நபரிடம் நகையை கொடுத்துவிட்டார். 4 சவரன் செயின் என அந்த பெண் அழுதபடியே தெரிவித்தார். மேலும், போலீசாரிடம் கூறியபோது அவர்கள் எந்த நடடிவக்கையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

முழு விசாரணைக்குப்பின்தான் என்ன நடந்தது என்பது தெரியும். இந்த சம்பவத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News