கரூரில் என்.டி.ஏ. எம்.பி.க்கள் குழு: நேரில் பார்த்தவர்களிடம் துயர சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்
- தேசிய ஜனநாயக கூட்டணியின் 8 பேர் கொண்ட எம்.பி.க்கள் குழு கரூர் வந்தடைந்துள்ளது.
- நேரில் பார்த்தவர்களிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
பாஜக தேசிய தலைவர் ஹெமா மாலினி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் 8 போர் கொண்ட குழுவை அமைத்து, கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டும். கூட்டல் நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதன்படி 8 பேர் கொண்ட குழு இன்று காலை கோவை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து கார் மூலம் கரூர் சென்றடைந்தது. கரூர் சென்ற அவர்கள் விபத்தை நேரில் பார்த்தவர்களிடம், கூட்ட நெரிசல் நடைபெற்றது குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது ஒருவர் "ஆதர் அர்ஜுனா விஜயிடம் சென்று மக்கள் மயக்கம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் எனக் கூறினார். அவர்கள் உடனடியாக தண்ணீர் பாட்டில்களை விசினர். உள்ளூர் நிர்வாகம் தோல்வியடைந்துவிட்டது. சாலையின் அகலம் 19 அடி. வாகனத்திற்கு 12 அடி தேவைப்பட்டது. அசாதாரண நிலை ஏற்பட்ட பிறகு, அவர் பேச்சை முடித்து விட்டு, கிளம்பி விட்டார். விஜய் 10 நிமிடங்கள் மட்டுமே அந்த இடத்தில் செலவிட்டார்" எனக் கூறினார்.
சம்பவத்தை நேரில் பார்த்த மற்றொருவர் "விஜய் பேச தொடங்கிய பிறகு 3 முதல் 4 நிமிடத்திற்குள் மக்கள் மயக்கம் அடையத் தொடங்கினர். அசாதாரண நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வரத் தொடங்கியத. அதுவும் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியது.
நாங்கள் எல்லோரும் ஓட ஆரம்பித்தோம். எல்லாவற்றையும் சரி செய்ய 1 மணி நேரம் ஆனது. எங்கள் பக்கத்தில் இருந்து செல்லாத பலர் கூட்டத்தில் இருந்தனர். அவர்கள் கூட்டத்தினரை மறுபக்கம் தள்ளாமல் பளத்தில் தள்ளினர்?" என்று கூறினார்.