தமிழ்நாடு செய்திகள்

தர்பூசணி பழங்களில் ரசாயன கலப்படமா? உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் விளக்கம்

Published On 2025-04-03 16:52 IST   |   Update On 2025-04-03 16:52:00 IST
  • தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.
  • தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

தர்பூசணி பழங்களில் ரசாயனங்கள் கலப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்பாதீர்கள் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.

நல்ல தர்பூசணிக்கும் ரசாயன நிறம் கலந்த தர்பூசணிக்கும் உள்ள வேறுபாடு குறித்து அவர் விளக்கினார்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் கூறியிருப்பதாவது:-

தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை. தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

சென்னையில் ஊசி மூலமாக ரசாயனம் செலுத்தி செயற்கையாக நிறமூட்டப்படுவதாக எங்கும் கண்டறியப்படவில்லை.

சென்னையின் ஒரு சில இடங்களில் கெட்டுப் போன பழங்கள் விற்கப்படுவது மட்டுமே ஆய்வில் கண்டறியப்பட்டது. எல்லா இடங்களிலும் தர்பூசணிகளில் நிறமூட்டி பயன்படுத்துவதாக கருதுவது தவறு.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News