தமிழ்நாடு செய்திகள்

கடலூரில் 3 நாட்கள் அன்புமணி நடைபயணம்

Published On 2025-09-09 13:47 IST   |   Update On 2025-09-09 13:47:00 IST
  • பண்ருட்டி மற்றும் கடலூரில் நடைபயணம் செல்லும் அன்புமணி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.
  • புவனகிரியில் நடைபெறும் நடைபயணத்தில் கடலூர் மீனவர்களை சந்திக்கிறார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தேர்தல் பிரசார நடை பயணத்தை கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.

திருப்போரூரில் தொடங்கிய இந்த நடைபயணம் 4 கட்டங்களாக பல்வேறு மாவட்டங்களில் நடந்தது. மீண்டும் தொடங்குகிறார். அடுத்த கட்டமாக மீண்டும் தனது நடைபயணத்தை டாக்டர் அன்புமணி கடலூரில் நாளை (10-ந்தேதி) தொடங்குகிறார்.

நாளை பண்ருட்டி மற்றும் கடலூரில் நடைபயணம் செல்லும் அன்புமணி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். நாளை மறுநாள் (11-ந் தேதி புவனகிரியில் நடைபெறும் நடைபயணத்தில் கடலூர் மீனவர்களை சந்திக்கிறார். 12-ந் தேதி நெய்வேலி இந்திரா நகர், விருத்தாச்சலத்தில் நடைபயணம் செல்லும் அன்புமணி வடலூர் ஞானசபை செல்கிறார். இந்த நடைபயணத்தின்போது தி.மு.க.வின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அடங்கிய ஆவண தொகுப்பு புத்தகத்தையும் வீடு வீடாக வழங்குகிறார்கள். 

Tags:    

Similar News