செங்கோட்டையன் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகள்: ஓ. பன்னீர்செல்வம்
- எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை அமித் ஷாவிடம் முன்வைத்தேன் என்றார் செங்கோட்டையன்.
- அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது செங்கோட்டையனின் எண்ணம்.
அதிமுக எம்.எல்.ஏ.-வும், மூத்த தலைவருமான செங்கோட்டையன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்ததாக தகவல் வெளியானது. அதை செங்கோட்டையன் உறுதிப்படுத்தினார். மேலும், "எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை அமித் ஷாவிடம் முன்வைத்தேன். தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினே். எங்களை பொறுத்தவரை அதிமுக என்ற இயக்கம் வலுப்பெற வேண்டும் என்பதுதான் நோக்கம்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அமித் ஷாவிடம், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை செங்கோட்டையன் முன்வைத்ததாக தெரிவித்தது குறித்து ஓ. பன்னீர் செல்வத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு முன்னாள் முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் "செங்கோட்டையின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்" என்றார்.
மேலும், தம்பிதுரை கருத்துக்கு பதில் சொல்ல முடியாது. நயினார் நாகேந்திரனிடம் எனது போன் எண் உள்ளது. அவர் என்னை தொடர்பு கொள்ளட்டும் எனத் தெரிவித்தார்.