தமிழ்நாடு செய்திகள்

பொதுப்பணித்துறையில் லஞ்சம் பெற்றது உறுதியானால் நடவடிக்கை- அமைச்சர் எ.வ.வேலு

Published On 2025-11-12 17:52 IST   |   Update On 2025-11-12 17:52:00 IST
  • மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
  • இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது.

மதுரையில் இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

10 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சியில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தென் தமிழகத்திற்கு முதலமைச்சர் முக்கியத்துவம் அளித்துள்ளார். ரூ.150 கோடி மதிப்பிட்டீல் மதுரை மேலமடையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

மக்களின் நீண்ட கோரிக்கையையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

டிசம்பர் 7-ம் தேதி மதுரை மேலமடையில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் ஜனவரியில் முடிக்கப்படும்.

அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் விதிமுறைகள் பின்பற்றப்படாததால் விபத்துகள் நடைபெற்றது. தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது.

தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்களில் உள்ள வளைவுகளில் அமெரிக்கா தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. பாலங்களின் வளைவுகளால் மட்டுமே விபத்துகள் நடைபெறுகிறது.

மதுரை தெற்குவாசல்- வில்லாபுரம் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு சாத்திய கூறுகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வு முடிவுகளின் படி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படும்.

பொதுப்பணித்துறையில் லஞ்சம் பெற்றதாக உறுதி செய்யப்படாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். குற்றச்சாட்டுக்கள் உறுதியானதால் பல்வேறு நபர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். ஆதாரப்பூர்வமாக புகார்கள் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பேன்.

இந்தியாவில் உள்ள ஜனநாயக ரீதியான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே 8 முறை நடைபெற்றுள்ளதால் எஸ்.ஐ.ஆர்.ஐ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கவில்லை.

எஸ்.ஐ.ஆர்.ஐ மேற்கொள்ள காலமும் நேரமும் போதாது என்பதைத்தான் கூறுகிறோம். வடகிழக்கு பருவமழை, பொங்கல் விழா, தேர்தல் தேதி அறிவிப்பு இருப்பதால் தற்போது எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளக் கூடாது என கூறுகிறோம்.

கொளத்தூரில் கள்ள ஓட்டுக்கள் இருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினாரா? அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒன்றை பேசி வருகிறார்.

நாங்கள் எதை சொன்னாலும் அதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர் கருத்துதான் கூறுவார். இந்தியாவில் உள்ள அனைவரும் எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்த்து கருத்து சொல்லும்போது எடப்பாடி பழனிசாமி மட்டும் ஆதரித்து கருத்து சொல்வது ஏதற்காக?

பா.ஜ.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளதால் அதன் செயல்பாடுகளுக்கு ஒத்து ஊதுகிறது. தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சராக ஓ.பி.எஸ். பதவி வகித்துள்ளார்.

மனோஜ் பாண்டியனுக்கு புரியாமலா தி.மு.க.விற்கு வந்திருப்பார். தமிழக அரசியலில் அண்ணா, பெரி யார் வகுத்துக் கொடுத்த திராவிட கொள்கையை கலைஞர் நிறைவேற்றினார்.

அதனையே மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். திராவிட கொள்கையை தி.மு.க. மட்டும் தான் கடைப்பிடிப்பதால் பிற கட்சிகளில் இருந்து தி.மு.க.விற்கு வருகிறார்கள்.

எடப்பாடி பழனிச்சாமி சங்கி கொள்கையை தாங்கி பிடிக்கிறார். அதனால்தான் அ.தி.மு.க.விலிருந்து, தி.மு.க.விற்கு வருகிறோம் என செல்கிறார்கள். தி.மு.க.விற்கு வருபவர்கள் அதன் கொள்கையை ஏற்றுக் கொண்டு வருகி றார்கள்.

திராவிட மாடல் ஆட்சி யில் ஏழை, எளிய மக்க ளுக்காக முதலமைச்சர் திட்டங்களை தீட்டி செயல்ப டுத்துவதால் தி.மு.க.வில் இணைகிறார்கள். தி.மு.க. விற்கு நீண்ட காலமாக உழைப்பவர்களுக்கு பதவி கள் வழங்கப்பட்டுள்ளது.

துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு என தி.மு.க.விற்கு உழைத்த வர்களுக்கு பதவி வழங்கப் பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க.வில் திறமை உள்ளவர்களை பயன்படுத்திக் கொள்வார். திறமை உள்ளவர்கள் தி.மு. க.வில் உள்ளவர்களா? அ.தி.மு.க.வில் இருந்து வந்தவர்களா? என பார்க்க மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News