தமிழ்நாடு செய்திகள்

திண்டுக்கல்லில் சோகம்: தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலி

Published On 2024-12-12 22:43 IST   |   Update On 2024-12-12 22:43:00 IST
  • திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
  • இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என தகவல் வெளியானது.

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு குழந்தை உள்பட 7 பேர் பலியாகினர் என முதல்கட்ட தகவல் வெளியானது.

தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News