தமிழ்நாடு செய்திகள்

2வது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது...

Published On 2025-10-24 10:25 IST   |   Update On 2025-10-24 10:33:00 IST
  • வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது.
  • வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வனிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி கடந்த 2 நாட்களாக நிலவி வந்தது. இதன்காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு அந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகி உள்ள 2-வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.

இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் எந்த பகுதியில் நோக்கி நகரக்கூடும் என்பது தெரியவரும். 

Tags:    

Similar News