தமிழ்நாடு செய்திகள்

ராஜபாளையம் அருகே கோவிலுக்குள் காவலர்கள் 2 பேர் வெட்டிக்கொலை

Published On 2025-11-11 09:13 IST   |   Update On 2025-11-11 09:13:00 IST
  • காவலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் உண்டியலும் சேதமடைந்துள்ளது.
  • உண்டியல் திருட்டை தடுக்க முயன்றபோது காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே காவலர்கள் 2 பேர் கோவிலுக்குள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவு காவலர்கள் பேச்சிமுத்து (50), சங்கர பாண்டியன் (65) ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காவலர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் கோவில் உண்டியலும் சேதமடைந்துள்ளது.

உண்டியல் திருட்டை தடுக்க முயன்றபோது காவலர்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News