தமிழ்நாடு செய்திகள்

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு- புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு

Published On 2025-03-01 20:12 IST   |   Update On 2025-03-01 20:12:00 IST
  • உதவி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
  • புகார்கள், கருத்துகள், ஐயங்களை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன்பெறலாம்.

தமிழகத்தில் வரும் மார்ச் 3ம் தேதி முதல் 12ம் வகுப்புக்கும், மார்ச் 5ம் தேதி முதல் 11ம் தேதிக்கும், மார்ச் 28ம் தேதி முதல் 10ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு தொடங்குகிறது.

இதையொட்டி, 10ம், 11ம், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான புகார்களை தெரிவிக்க உதவி எண்களை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உதவி எண்களை தொடர்பு கொண்டு புகார்கள், கருத்துகள், ஐயங்களை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்து பயன்பெறலாம் என அமைச்சர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News