தமிழ்நாடு

ஊத்துக்கோட்டை அருகே இளம்பெண் தற்கொலை

Published On 2022-10-05 09:15 GMT   |   Update On 2022-10-05 09:15 GMT
  • உடல்நிலை பாதிக்கப்பட்ட தனலட்சுமி ஆஸ்பத்திரிக்கு செல்ல கணவரை அழைத்தார்.
  • மனவேதனை அடைந்த தனலட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள அள்ளிகுழி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் நேதாஜி. இவரது மனைவி தனலட்சுமி (வயது25). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட தனலட்சுமி ஆஸ்பத்திரிக்கு செல்ல கணவர் நேதாஜியை அழைத்தார். ஆனால் அவர் உடன் வர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த தனலட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News