தமிழ்நாடு செய்திகள்

சென்னை சென்டிரல் - பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே

Published On 2023-11-20 08:40 IST   |   Update On 2023-11-20 08:40:00 IST
  • இந்தியாவிலேயே வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது.
  • சென்னை சென்டிரலில் இருந்து இன்று மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் புறப்படும்.

சென்னை:

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் நலனுக்காகவும் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்து வருகிறது.

சென்னை சென்டிரல்-பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்தியாவிலேயே வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக இரவு நேரத்தில் இயக்கப்பட உள்ளது. அந்தவகையில், சென்னை சென்டிரலில் இருந்து இன்று (20-ந்தேதி) மாலை 5.15 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06031) புறப்பட்டு அதே நாள் இரவு 10 மணிக்கு பெங்களூரு சென்றடையும். மறுமார்க்கமாக, யஸ்வந்த்பூரில் இருந்து நாளை (21-ந்தேதி) இரவு 11 மணிக்கு வந்தே பாரத் சிறப்பு ரெயில் (06032) புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை சென்டிரல் சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News