தமிழ்நாடு

தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சா.- மு.க.ஸ்டாலின்

Published On 2023-02-19 06:48 GMT   |   Update On 2023-02-19 06:48 GMT
  • உ.வே.சா நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம்.
  • தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம்.

சென்னை:

தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் 169-வது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு:-

ஏடு தேடியலைந்து தமிழ்க் கருவூலங்களை அச்சிலேற்றி காலத்தால் அழியாதிருக்கும் கொடை செய்த 'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே.சா பிறந்தநாள்.

அவர் நினைவைப் போற்றி, திக்கெட்டும் தமிழ் பரவ பணி செய்வோம். தமிழ் காக்கும் பணிக்கு நம்மை ஒப்படைத்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

Tags:    

Similar News