தமிழ்நாடு செய்திகள்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது
- 11 பேர் கைதான நிலையில், இன்று இருவர் கைது.
- இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.
ஏற்கெனவே 11 பேர் கைதான நிலையில், இன்று மலர்க்கொடி, ஹரிஹரன் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன், திமுக நிர்வாகியின் மகன் சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மலர்கொடி மற்றும் ஹரிஹரன், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் வழக்கறிஞர் மலர்க்கொடி ஏற்கெனவே கைதான வழக்கறிஞர் அருளுடன் தொடர்பில் இருந்தவர். இந்த 13 பேரில் திருவேங்கடம் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.