தமிழ்நாடு

பேருந்துகளை முழுமையாக பரிசோதித்து இயக்க அமைச்சர் உத்தரவு

Published On 2024-02-07 06:30 GMT   |   Update On 2024-02-07 06:30 GMT
  • அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.
  • சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க வேண்டும்.

சென்னை:

சென்னையில் நேற்று ஓடும் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து கீழே விழுந்த பெண் பயணி படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தையடுத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

* அனைத்து மாநகர பேருந்துகளையும் முழுமையாக பரிசோதித்த பின் இயக்க வேண்டும்.

* சென்னையில் இயக்கப்படும் 3000-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மேற்கூரை, பாகங்களை சரியாக பரிசோதித்து இயக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

மிக மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகளை முழுமையாக நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News