தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., குறித்து ரஜினிகாந்த் பேசியதில் தவறு இல்லை- அமைச்சர்

Published On 2024-01-10 06:42 GMT   |   Update On 2024-01-10 06:42 GMT
  • ரஜினிகாந்த் வரலாற்றை பேசி இருக்கிறார்.
  • விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் அமைக்க அவரது குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

திருப்பூர்:

சென்னையில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் கருணாநிதியால் உயர்ந்தவர்தான் எம்.ஜி.ஆர். என்று நடிகர் ரஜினிகாந்த பேசியது வருத்தம் அளிப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தெரிவித்தனர்.

இந்தநிலையில் இன்று இது தொடர்பாக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறும் போது,


திரை உலகினர் நடத்திய கலைஞருக்கான பாராட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியதில் தவறு இல்லை. வரலாற்றை பேசி இருக்கிறார். அது தவறாக தெரியும் என்றால் அவர்களுடைய மனசாட்சியை பொருத்தது. மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்திற்கு மணி மண்டபம் அமைக்க அவரது குடும்பத்தினர் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கோரிக்கை முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது என்றார்.

Tags:    

Similar News