தமிழ்நாடு
மாமல்லபுரத்தில் 3 நாட்கள் நடைபெற்ற சி-20 மாநாடு நிறைவடைந்தது
- சி20 என்பது, ஜி20-ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும்.
- மாநாட்டின் 2-ம் நாளில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.
மாமல்லபுரம்:
சர்வதேச சி-20 மாநாடு 3நாட்களாக மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இதனை கவர்னர் ஆர்.என்.ரவி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
சி20 என்பது, ஜி20-ன் அதிகாரப்பூர்வ குழுக்களில் ஒன்றாகும். இந்த சி-20 மாநாட்டில் ஆன்மிகம், ஒருமைப்பாடு மேலாண்மை, கலாச்சாரம், எளிமைத்துவம், மோதல் தவிர்ப்பு, சுற்றுச்சூழல் உணர்வு உள்ளிட்டவை பற்றி ஆராய்ந்து விவாதிக்கப்பட்டது.
மாநாட்டின் 2-ம் நாளில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார். நிறைவு நாளான நேற்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.