தமிழ்நாடு

நல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Published On 2023-06-12 07:27 GMT   |   Update On 2023-06-12 07:27 GMT
  • நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
  • கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை.

தொப்பூர்:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கோம்பை கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குடி தண்ணீர் வழங்கவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பள்ளி குழந்தைகள் கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் சமையல் செய்வதற்கு குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை என்று மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோம்பையைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களுடன் இன்றுகாலை பெண்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இறுதியாக ஒரு வழியாக பாளையம்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்களை சந்தித்து ஒரு வார காலத்தில் குடிநீர் பிரச்சினை தீர்த்து வைக்கிறேன் என உறுதி அளித்து சமாதானப்படுத்திய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News