தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை 'நல்ல தலைவர்கள்' - விஜய்
- உங்களை எல்லோரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
- பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும், இன்று கிடைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 234 தொகுதிகளிலும் பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் விழாவில் விஜய் பேசியதாவது:-
* நடந்து முடிந்த தேர்வில் சாதனை படைத்த தம்பி, தங்கைகள், அவர்களுடன் வந்திருக்கும் பெற்றோர்களுக்கும், விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்த புஸ்சி ஆனந்த், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் என் நெஞ்சில் குடியிருக்கும் என் நண்பா, நண்பிகள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள்...
* உங்களை எல்லோரையும் மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
* பாசிட்டிவ் பவர் இருப்பவர்களை பார்த்தால் ஒரு சக்தி கிடைக்கும், இன்று கிடைத்துள்ளது.
* தமிழ்நாட்டின் எதிர்காலம் மாணவ, மாணவிகள் தான்.
* எல்லா துறையும் நல்ல துறை தான். நீங்க எதை தேர்ந்தெடுக்குறீங்களோ.. அதை முழு ஈடுபாடுடன் செய்தால் அதில் வெற்றி நிச்சயம் தான். அதனால் நீங்கள் உங்களுக்கு பிடித்த துறையை தேர்ந்தெடுங்கள்.
தமிழகத்தில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளனர்.
*இதுபோன்ற நிகழ்வுகளில் நல்ல விஷயங்களை பேசுவதை தவிர வேறு என்ன பேசுவது..
* தமிழ்நாட்டிற்கு தற்போதைய தேவை நல்ல தலைவர்கள் தான். அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை.
* துறையை தேர்ந்தெடுப்பது போல அரசியலையும் தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.