தமிழ்நாடு

மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்- மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published On 2022-08-22 06:28 GMT   |   Update On 2022-08-22 07:18 GMT
  • திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.
  • நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை.

சென்னையின் 383-வது தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல்.

இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News