தமிழ்நாடு

திருவள்ளூர் அருகே நெல்கொள்முதல் நிலையமாக மாறிய கிராம சேவை மையம்

Published On 2023-05-31 10:17 GMT   |   Update On 2023-05-31 10:17 GMT
  • மக்கள் தங்களுக்கு தேவையான சாதி, இருப்பிட சான்று போன்ற சான்றிதழ்கள் பெற கட்டப்பட்டது.
  • திருப்பந்தியூர் கிராமச் சேவை மையம் நெல் கொள்முதல் நிலையமாக மாறி உள்ளது.

திருவள்ளூர் அருகே உள்ள திருப்பந்தியூர் ஊராட்சிக்குட்பட்டது பண்ணுார் கிராமம். இங்குள்ள கால்நடை மருத்துவமனை அருகே கடந்த 2014-15-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.14.55 லட்சம் மதிப்பீட்டில் கிராம சேவை மையம் கட்டப்பட்டது.

இதன் மூலம் மக்கள் தங்களுக்கு தேவையான சாதி, இருப்பிட சான்று போன்ற சான்றிதழ்கள் பெற கட்டப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடைந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை இந்த கிராம சேவை மையம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இந்நிலையில் தற்போது திருப்பந்தியூர் கிராமச் சேவை மையம் நெல் கொள்முதல் நிலையமாக மாறி உள்ளது. அங்கு முழுவதும் நெல்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட நிர்வாகம் கிராம சேவை மையத்தை முறையான மக்கள் சேவை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News