தமிழ்நாடு

தமிழக போலீசுக்கு பயந்து தப்பி ஓட்டம்: வெளி மாநிலங்களில் பதுங்கி இருக்கும் ரவுடிகளை பிடிக்க டி.ஜி.பி. உத்தரவு

Published On 2023-01-23 10:20 GMT   |   Update On 2023-01-23 10:20 GMT
  • போலீஸ் நடவடிக்கை தீவிரமானதை தொடர்ந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடி விட்டனர்.
  • வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ள ரவுடிகளை கண்டுபிடித்து கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை:

தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

சட்டம்-ஒழுங்கை காக்க காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி இருப்பதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ரவுடிகளுக்கு எதிரான போலீஸ் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மண்டல ஐ.ஜி.க்கள் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

போலீஸ் நடவடிக்கை தீவிரமானதை தொடர்ந்து ரவுடிகள் பலர் வெளி மாநிலங்களுக்கு தப்பி ஓடி விட்டனர்.

இவர்களில் சிலர் அங்கிருந்தபடியே தனது கூட்டாளிகளுடன் போனில் தொடர்பு கொண்டு குற்றச் செயல்களுக்கு தூண்டுதலாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து வெளி மாநிலங்களில் பதுங்கி உள்ள ரவுடிகளை கண்டுபிடித்து கைது செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். இது தொடர்பாக மாவட்ட சூப்பிரண்டுகளுக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வெளி மாநில ரவுடிகளின் போன் அழைப்புகளை வைத்து அவர்களை பிடித்து சிறையில் தள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ரவுடிகள் வேட்டையில் போலீஸ் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

Tags:    

Similar News