எஸ்.எஸ்.எல்.சி., 11-ம் வகுப்பு தேர்வு முடிவு 19-ந்தேதி வெளியாகிறது
- பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜூன் 19-ந்தேதி நடத்தப்படும்.
- பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற உயர் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடவும் தேர்வுத்துறை தயாராக உள்ளது.
10-ம் வகுப்பு தேர்வு முடிவு 17-ந்தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவு 19-ந்தேதியும் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டு இருந்தது.
இந்த நிலையில் 10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவை ஒரேநாளில் வெளியிடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜூன் 19-ந்தேதி நடத்தப்படும் என்றும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர் கல்வி பெற உயர் கல்வி வழிகாட்டி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தாங்கள் படித்த பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு இக்குழு ஆலோசனை வழங்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.