தமிழ்நாடு

நெல்லையில் கனமழையால் ஏற்பட்ட சேத விவரம் வெளியீடு

Published On 2023-12-25 06:52 GMT   |   Update On 2023-12-25 07:14 GMT
  • மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம்.

நெல்லை :

நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்றுவரை எடுக்கப்பட்ட பாதிப்பு விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மழை வெள்ள பாதிப்பால் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 67 மாடுகள், 135 கன்றுகள், 504 ஆடுகள், 28,392 கோழிகள் உயிரிழப்பு. 1,064 குடிசை வீடுகள் முற்றிலும் இடிந்து சேதம் அடைந்துள்ளது.


இழப்பீடு நிவாரணமாக ரூ.2.87 கோடி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News