உள்ளூர் செய்திகள்
பொத்தேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது
பொத்தேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பொத்தேரி பகுதியை சேர்ந்த பாபு (வயது 51), என்பவர் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பாபுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.