நாங்கள் 5ஜி கொண்டு வந்தோம்... அவர்கள் 2ஜி-யில் ஊழல் செய்தார்கள்...
- பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
- உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பின்பு பேச தொடங்கிய பிரதமர், என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம் என தமிழில் தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
* தமிழக மண்ணில் நான் ஒரு மாபெரும் மாற்றத்தை காண்கிறேன்.
* தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் இந்தியா கூட்டணியின் கர்வத்தை தமிழகம் அடக்கும்.
* தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக எப்போதும் மாற்றாது.
* மக்களை கொள்ளையடிக்கவே இவர்கள் ஆட்சியமைக்க நினைக்கிறார்கள்.
* நாங்கள் 5ஜி கொண்டு வந்தோம். அவர்கள் 2ஜியில் ஊழல் செய்தார்கள்.
* இந்தியா கூட்டணி ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்தார்கள்.
* இந்தியா கூட்டணியின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது.
* பா.ஜ.க அரசு ஏராளமான விமான நிலையங்களை கட்டியது.
* கன்னியாகுமரி பா.ஜ.க.வுக்கு எப்போதும் மாபெரும் ஆதரவு தந்திருக்கிறது.
* வாஜ்பாய் வடக்கையும், தெற்கையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டத்தை கொண்டு வந்தார்.
* கன்னியாகுமரி- திருவனந்தபுரம் 4 வழிச்சாலை கொண்டு வர மாநில அரசு உதவவில்லை.
* இரட்டை ரெயில் பாதை வேண்டும் என்ற மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை இவர்கள் நிறைவேற்றவில்லை.
* பா.ஜ.க. ஆட்சியில் கன்னியாகுமரிக்கு ஏராளமான வளர்ச்சிப்பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
* நாம் தமிழ்நாட்டின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முனைப்போடு இருக்கிறோம்.
* உங்களுடைய ஒவ்வொரு துன்பத்திற்கும் நாங்கள் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம்.
* மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை உணர்ந்து பாராட்டுகிறேன்.
* தமிழ்நாட்டின் ரெயில்வே, சாலை வசதிகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.
இவ்வாறு பிரதமர் மோடி தொடர்ந்து பேசிவருகிறார்.
#WATCH | "DMK-Congress' INDI alliance can never make Tamil Nadu a developed state as its history is of scams and corruption...," says PM Modi during a public rally in Kanniyakumari, Tamil Nadu. pic.twitter.com/mcKvjA8QkO
— ANI (@ANI) March 15, 2024