தமிழ்நாடு

தேர்தல் தொடர்பான ருசிகர தகவல்கள்...

Published On 2024-04-18 05:21 GMT   |   Update On 2024-04-18 06:49 GMT
  • தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
  • தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்-3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467.

* தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் மிக எளிதாக வாக்களிப்பதற்காக 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

* தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

* மிக மிக பதட்டம் நிறைந்ததாக 181 வாக்குச்சாவடிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 181 வாக்குச்சாவடிகளிலும் துணை நிலை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

* தேர்தல் பாதுகாப்பு பணிகளில் சுமார் 2 லட்சம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

* தேர்தல் பாதுகாப்புக்காக பக்கத்து மாநிலங்களில் இருந்து 10 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் ஆண்கள்-873 பேர், பெண்கள்-77 பேர்.

* 950 வேட்பாளர்களில் 606 பேர் சுயேட்சைகள். மற்றவர்கள் அரசியல் கட்சி வேட்பாளர்கள்.

* தமிழக வாக்காளர்களில் முதல் முறையாக நாளை வாக்களிக்க இருக்கும் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 420.

* 20 முதல் 29 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 17 ஆயிரத்து 679.

* 30 வயது முதல் 39 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 263.

* 40 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 37 லட்சத்து 96 ஆயிரத்து 152.

* 50 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 10 லட்சத்து 51 ஆயிரத்து 484.

* 60 வயது முதல் 69 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 71 லட்சத்து 64 ஆயிரத்து 278.

* 70 வயது முதல் 79 வயதுக்குட்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 38 லட்சத்து 66 ஆயிரத்து 798.

* 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14 லட்சத்து 44 ஆயிரத்து 851 பேர் உள்ளனர்.

* தேர்தல் பணிகளில் 3 லட்சத்து 32 ஆயிரம் அரசு ஊழியர்கள், முன்னாள் ஊழியர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

* தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அவர்களது பணிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்பட உள்ளது.

* தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு 95 சதவீதம் பூத் சிலிப் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

* சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 5 நகரங்களில் வாக்களிப்பதற்காக இலவச ரபிடோ பயணத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்துக்கு "கடமைக்கான சவாரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.


* நாளை ஓட்டுப்பதிவு எப்படி நடைபெறுகிறது என்பதை முழுமையாக கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 44 ஆயிரத்து 800 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. அதன் மூலம் அந்த வாக்குச்சாவடிகளின் செயல்பாடுகள் 100 சதவீதம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும்.

* அரசு ஊழியர்கள் இன்று மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை பெருமளவில் தடுத்து இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. என்றாலும் விதிமுறைகளை மீறி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம், நகை பறிமுதல் செய்யப்பட்டன.

* தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் ரூ.1,297 கோடி மதிப்புள்ள நகைகள், ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. உரிய ஆவணத்தை காட்டி இவற்றை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News