தமிழ்நாடு

5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கும் சென்னை பல்கலைக்கழகம்- கவர்னரை சாடிய ப.சிதம்பரம்

Published On 2024-01-27 05:04 GMT   |   Update On 2024-01-27 05:29 GMT
  • கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.
  • உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.

சென்னை:

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

1857 இல் நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் கடந்த 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் உள்ளது.

கவர்னர்-அரசு இடையே ஏற்பட்டுள்ள நிலைப்பாடுதான் காரணம்.

தமிழகத்தில் பல சர்ச்சைகளுக்கு மையமாக தமிழக கவர்னர் இருப்பது ஏன்? கவர்னர் தான் பல சர்ச்சைகளுக்கு காரணம் என சிலர் கூறுகின்றனர்.

உயர்கல்வியின் நிலை குறித்த வருத்தமான கருத்து இது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News