தமிழ்நாடு செய்திகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு

Published On 2023-01-28 11:02 IST   |   Update On 2023-01-28 11:02:00 IST
  • தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு:

தேர்தலையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு அங்கு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க செல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேப்போல் தேர்தலையொட்டி பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் பணம் பட்டுவாடா கொடுப்பதை கண்காணிக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பறக்கும் படை நிலை கண்காணிப்பு குழுவினர் செயல்பாடுகளை கண்டறியும் வகையில் அவர்கள் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவர்களின் செயல்பாடுகளையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அலுவலர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News