தமிழ்நாடு

இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர் பேராசிரியர் அன்பழகன்- மு.க.ஸ்டாலின்

Published On 2024-03-07 07:41 GMT   |   Update On 2024-03-07 07:41 GMT
  • கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக் குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார்.
  • என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

"குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனிவரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள்.

கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக் குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News