தமிழ்நாடு செய்திகள்
சரத் யாதவ் மரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவின் மறைவால் மிகவும் வேதனை அடைந்தேன்.
- சோசலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கிய சரத் யாதவ் தமது இறுதி மூச்சு வரையிலும் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவராய்த் திகழ்ந்தவர் ஆவார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
ராஷ்டீரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவின் மறைவால் மிகவும் வேதனை அடைந்தேன். சோசலிச இயக்கத்தின் மிக உயரிய தலைவராக விளங்கிய சரத் யாதவ் தமது இறுதி மூச்சு வரையிலும் மக்களாட்சி மற்றும் மதச்சார்பின்மைக் கொள்கைகளில் ஆழ்ந்த பற்று கொண்டவராய்த் திகழ்ந்தவர் ஆவார். அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.