தமிழ்நாடு செய்திகள்

உலக வங்கி நிதியுதவியுடன் மிருகண்டா நதி அணையை புனரமைக்க ஒப்புதல்: அமைச்சர் துரைமுருகன்

Published On 2023-10-09 10:31 IST   |   Update On 2023-10-09 10:31:00 IST
  • மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கேள்வி எழுப்பினார்.
  • அணையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழியையும் ஆய்வறிக்கையாக கொடுத்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் பதில்.

சென்னை:

தமிழக சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கலசப்பாக்கம் தொகுதி, கலசப்பாக்கம் ஒன்றியம், மிருகண்டா நதி அணையை புனரமைக்க அரசு முன்வருமா எனவும், 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதலமடைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு அந்த பணிகள் தொடங்கப்படுமா எனவும் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மிருகண்டா நதியை சீரமைக்க உலக வங்கியின் நிதி உதவியுடன் பணிகள் மேற்கொள்ள மத்திய நீர்வளத் துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், Dam safety review மூலமும் அணையை பாதுகாக்க செய்ய வேண்டிய வழியையும் ஆய்வறிக்கையாக கொடுத்துள்ளோம் என்றும், அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்.

Tags:    

Similar News