தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3454 கனஅடியாக குறைந்தது

Published On 2023-10-30 09:42 IST   |   Update On 2023-10-30 09:42:00 IST
  • அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
  • தற்போது அணையில் 18.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அணைக்கு வினாடிக்கு 4ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 3 ஆயிரத்து 454 கனஅடியாக குறைந்தது. நீர்மட்டம் 51.83 அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தொடர்ந்து வினாடிக்கு 500கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 18.98 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News