தமிழ்நாடு செய்திகள்

காஞ்சிபுரத்தில் மழை நீர் வடிகால் பணிகளை மேயர் திடீர் ஆய்வு

Published On 2022-10-18 12:40 IST   |   Update On 2022-10-18 12:40:00 IST
  • காஞ்சிபுரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
  • வருகிற பருவ மழைக்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற பருவ மழைக்கு முன்பு பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மழைநீர் கால்வாய் பணிகளை மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர், மங்களதீர்த்தம். உலகளந்த பெருமாள் கோவில் குளம், ரங்கசாமி குளம் மற்றும் மேட்டு தெருவில் நடை பெறும் பணிகளை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் மகாலட்சுமி யுவராஜ் உத்தரவிட்டார்.

அப்போது மாநகராட்சி ஆணையர் கண்ணன், பணிக்குழு தலைவர் சுரேஷ், மண்டல தலைவர் சாந்தி சீனிவாசன், கவுன்சிலர்கள் சோபனா, கண் ணன், கார்த்திக்,சுப்புராயன், மாநகராட்சி பொறியாளர்கள் உடன் இருந்தனர்.

Similar News