தமிழ்நாடு

பாராளுமன்றத் தேர்தலில் டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன்: மன்சூர் அலிகான்

Published On 2024-01-10 09:35 GMT   |   Update On 2024-01-10 09:35 GMT
  • 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன்.
  • தேனி மண்ணில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

சென்னை:

தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராக இருப்பவர் மன்சூர் அலிகான். சமீபத்தில் நடிகை திரிஷா பற்றி இவர் பேசிய கருத்துக்கள் பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இதையொட்டி மன்சூர் அலிகான் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மன்சூர் அலிகான் டி.டி.வி.தினகரனை எதிர்த்து போட்டியிட போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

நான் 1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டை வண்டி சின்னத்தில் போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் பெற்றேன். தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் ஜெயலலிதா பெயரால் வெற்றி பெற்றார்.

நான் ஜெயலலிதா மரணத்திற்கு வழக்குப் போட்டு எல்லா ஆவணங்களையும் வைத்துள்ளேன். அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அவரை கவர்னர் உள்பட யாரையும் பார்க்கவிடாமல் செய்தனர்.

இதை மக்களிடம் எடுத்து சொல்ல 1999-ம் ஆண்டு நான் தோற்ற அதே பெரிய குளம் தேனி மண்ணில் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன்.

இது சத்தியம். எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. இந்தா வர்றேன்டா...

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News