தமிழ்நாடு

வட தமிழக கடலோர பகுதிக்கு ரெட் அலர்ட்- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2022-11-11 04:27 GMT   |   Update On 2022-11-11 04:27 GMT
  • புதுச்சேரியில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • வட கடலோர மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நகர்நது வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நவம்பர் 12-13ம் தேதிகளில் தமிழகம்- புதுச்சேரியில் கரையை கடக்க உள்ளது.

இதன் எதிரொலியால், வட தமிழக கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், புதுச்சேரியில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News