தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடி வருகை பல்லடத்தில் ஹெலிகாப்டர் ஒத்திகை

Published On 2024-02-25 11:00 IST   |   Update On 2024-02-25 11:00:00 IST
  • பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
  • விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் வருகிற 27-ந்தேதி பா.ஜ.க. சார்பில் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். இதற்காக கேரளாவில் இருந்து கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் மாதப்பூர் மைதானத்திற்கு செல்கிறார். இதற்காக அங்கு ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்று காலை மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் சூலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட விமானப்படை ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது.

Tags:    

Similar News