தமிழ்நாடு செய்திகள்

ஈ.பி.எஸ் அணி வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய திட்டம்

Published On 2023-02-03 09:18 IST   |   Update On 2023-02-03 09:18:00 IST
  • ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
  • வேட்புமனு இன்று தாக்கல் செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில் தேதி மாற்றம்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் ஈ.பி.எஸ் அணி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வரும் 7ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

வேட்புமனு இன்று தாக்கல் செய்ய ஏற்கனவே திட்டமிட்டிருந்த நிலையில், வரும் 7ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News