தமிழ்நாடு

பிரதமராகும் தகுதி ஈ.பி.எஸ்சுக்கு மட்டும்தான்... பொன்னையன் சொல்கிறார்

Published On 2023-06-17 09:03 GMT   |   Update On 2023-06-17 09:03 GMT
  • பல்வேறு பொறுப்பு வாய்ந்த துறைகளில் அமைச்சராக இருந்து அனுபவம் வாய்ந்த பொன்னையன்தான் இப்படி சொல்லி இருக்கிறார்.
  • அமித் ஷா சொன்னதை சுட்டிக்காட்டிய பொன்னையன் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு தகுதியான நபர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான்.

சும்மாவும் சொல்லவில்லை. யாரோ ஒருத்தர் சொன்னதும் இல்லை. தமிழகத்தில் சட்டத்துறை உள்ளிட்ட பல்வேறு பொறுப்பு வாய்ந்த துறைகளில் அமைச்சராக இருந்து அனுபவம் வாய்ந்த பொன்னையன்தான் இப்படி சொல்லி இருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தமிழ்நாட்டில் இருந்து பிரதமரை உருவாக்குவோம் என்று அமித்ஷா சொன்னதை சுட்டிக்காட்டிய பொன்னையன் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வருவதற்கு தகுதியான நபர் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான். அவர் இந்திய மற்றும் உலக அரசியலை தெரிந்தவர். விரல் நுனியில் புள்ளி விவரங்களை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராக வரக்கூடிய தகுதியுடன் இருக்கிறார்" என்று கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News